புதன், 22 ஏப்ரல், 2009
ஒரு இலங்கைத் தமிழனின் இறுதி வார்த்தைகள்...
நான் தமிழனும் இல்லை, சிங்களனும் இல்லை,
மனிதாபிமானம் மறுக்கப்பட்ட மனிதன்..
உங்கள் மௌனம்... எங்கள் மரணம்....
இலங்கையிலிருந்து நன்றி....
எங்கள் சாவுக்கு முன்னரே
மௌன அஞ்சலி செலுத்தும்..
சகோதரர்களுக்கு நன்றி...
அரசியல்வாதிகள்
தேசத்தை வழி நடத்த வேண்டியவர்கள்,
நன்றாகவே நடத்துகிறார்கள் சேதத்தை...
புதன், 15 ஏப்ரல், 2009
எல்லாப் பெண்களுக்கும் ஒரு அழகுண்டு என்றிருந்தேன்...
உன்னைப் பார்க்கும் வரை...
எல்லா அழகுகளும் உள்ள பெண்ணும் உண்டு என்றறிந்தேன்...
உன்னைப் பார்த்தவுடன்......
காதலும் கண்களும்
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்!
உன் கண்கள் இல்லாமல் காதல் இல்லை என்பேன் நான்!
முத்தப் போட்டியின் முடிவில்...
நமக்கிடையே நடக்கும் முத்தப் போட்டிகளின்
முடிவில் எப்போதும் வெல்கிறது காதல்..
அவள் இல்லாத அதே இடம்..
கரையில் நான்,
குளத்தில் கல்,
கலங்கியது .... என் மனம்.
சம்மதம்...
அம்மாவும்.. அப்பாவும்.. முதன்முறையாக சம்மதம் சொன்னார்கள் திருமணமன்றத்தில்,
ஆறு வருடங்களுக்குப் பின் இப்போது அடுத்த முறை சொலவது.... நீதி மன்றத்தில் தான்...
நேட்சரும் சயின்சும்....
கல்லூரியில் ஏற்பட்டது நமது பரிச்சயம்,
அதன்பின்.. சரியாக எழுதவில்லை நான் ஒரு பரிட்சையும்...
நீ படிப்பது குவான்டம், அலைவரிசை அறிவியல்
நான் கற்பதோ கவிதை, கதை, கரும்புத் தமிழ்
உன் விருப்பம் இயற்பியலில் ராணி ஆக வேண்டுமென்பது...
இந்நாட்டு ராஜா யார் என்பதே எனக்குத் தேவை இல்லாதது...
நான் எழுதியதோ உனக்கு வழவழா கவிதை..
என்னைப் பொறுத்தவரை... அதுவே நான் போட்ட முதல் வாழ்க்கை விதை....
நேட்சரும் சயின்ஸும் ஒண்ணா சேரும்போது....
நாம ஏன் ஒண்ணா சேரக் கூடாது ..?
திங்கள், 6 ஏப்ரல், 2009
மதுரை....
வீரம் வெளஞ்ச மண்ணு ...எங்க தலையில....
புகைப்பழக்கம்
நிறுத்த முடிவு செய்து 10 நாட்கள் நிறுத்தினேன்...
நிறுத்த முடியும் என்று 11ம் நாள் மீண்டும் தொடங்கினேன்....
மூட்டு வலி
அலையாய் அலைந்தாலும்.... அமர்ந்த பின் தான் தெரியும்....!
என் கவலை
கறுத்திருப்பதனால் அல்ல...
கருத்து இல்லாமல் இருப்பதனால்...
ஹாப்பி நியூஇயர்....!
நாராசமாய் கத்தியவனை நறுக்கென்று கடித்த நாய்க்கு தெரியுமா?
