திங்கள், 4 மே, 2009
வேலையில் சேர வெளியூர்ப் பயணம்
முன்னே செல்லும் ரயில்
ஜன்னலோரத்தில் நான்
பின்னே செல்லும் நினைவுகள்..
சிகரெட்..
பற்றவைத்து இழுக்க இழுக்கக் குறையுது...... ஆயுசு
பன்றிக் காய்ச்சல்...
கைகுலுக்கினால் பரவலாம்.. கைகூப்பி வணங்கினால் பரவாது.
நீ இன்றி அமையாதென் உலகு...
சூரிய உதயத்தில் கால் தொடும் கடல் அலை,
தூரத்தில் தெரியும் மழைக்கால வானவில்,
காற்றில் வரும் புல்லாங்குழல் இசை,
அந்தி மாலையில் மழையின் மண்வாசனை,
இவற்றையெல்லாம் நான் ரசிபபதில்லை...
நீ என்னருகில் இல்லாத சமயங்களில்...
அயல்நாட்டில் ஆன்சைட் பணி...
"மணி 8... எழுந்திரு" அலாரம் அழைத்தது...
"பில்லை செலுத்தவும்" குறுஞ்செய்தி வந்தது.
"ஃபைல் அனுப்பு" மேலாளரின் மெயில் காட்டியது.
"உங்கள் கணக்கில்.." பதிவு செய்த குரல் கூறியது.
"Are you sure?" கணிப்பொறி கேட்டது.
"Second Floor" லிஃபட் சொன்னது.
"அப்பா, எப்ப வருவீங்க?" கனவில் என் குழந்தை!
கங்கை கொண்ட பாவங்கள்..
"இனி பண்ணப் போற பாவத்துக்கும் சேர்த்துக் குளி"
- கங்கையில் குளிக்கும் சிறுவனிடம் தாத்தா.
இனிப்பு
எவரிடமும் இனிமையாக பேசாதவருக்கு வந்தது.....சக்கரைவியாதி.
2 Comments:
-
- Madhavan said...
6 மே, 2009 அன்று 11:59 PMNice Kavithaikal machi!- Maheswari said...
7 மே, 2009 அன்று 7:37 AM"Vaelaiyil Sera Veliyoor Payanam" - Nice kavithai..
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
